Thursday, July 23, 2009

மதிய சாம்பார் (sambar)

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 பிடி (4 பேர்)
துவரம் பருப்பு - 50 மிலி (2 பேர்)
மிளகாய் பெரியது - 1 (1 நபர்)
குழம்பு பொடி - 1 கரண்டி (4 பேர்)
தக்காளி சிறியது - 1 (1நபர்)
கடலை மாவு - 1/4 கரண்டி (4 பேர்)
காய்கறிகள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 (4 பேர்)
பெருங்காயம் - 1 சிறு கரண்டி (4 பேர்)
விளக்கெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை
குக்கரில் தண்ணீர் ஊற்றி, துவரம் பருப்பு, விளக்கெண்ணெய், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறிகள் போட்டு 3 விசில் வரும் வரைவைத்து பின் இதமான சூட்டில் 5 நிமிடம் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரஷர் நீங்கிய பின் குழம்பு பொடி, கடலை மாவை நன்கு நீரில் கரைத்துஊற்றவும். தேவையான அளவு உப்பை சேர்த்து குக்கரினை மூடாமல் 5 நிமிடம்கொதிக்க வைக்கவும். சுவையான சாம்பார் தயார்.

No comments: